முனைவர் இரா. பாவேந்தன் நினைவேந்தல்
அறிவியல் தமிழ்ச்சுடர் விருது அறிவிப்பு
அறிவியல் தமிழறிஞர் முனைவர் இரா. பாவேந்தனின் நினைவைப் போற்றிடவும் அறிவியல் தமிழ் ஆய்வுப்பணிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அறிவியல் தமிழ்ச்சுடர் விருது குறித்து அறிவித்திருந்தோம். பலர் இவ்விருதிற்கு மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் நடந்து வரும் அறிவியல் தமிழ் ஆய்வுகளை அறிவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மணிமேகலை அறக்கொற்றத்திற்கு வந்திருந்த விண்ணப்பங்களை உற்றுநோக்கியதன் அடிப்படையில் 2021ஆம் ஆண்டிற்கான அறிவியல் தமிழ்ச்சுடர் விருதினை முனைவர் கி. ஜெகதீசன், உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிள்ளையார்பட்டி அஞ்சல், தஞ்சாவூர் – 613403 அவர்கள் பெறவுள்ளார். முனைவர் கி. ஜெகதீசன் அவர்களை இனிது வாழ்த்தி மகிழ்கின்றோம். இந்த விருது வழங்கும் நாளும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.
விருது பெற்றவர்க்கு வாழ்த்துகள். பாவேந்தனை நினைவூட்டிய பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஐயா 🙏🙏🙏
பதிலளிநீக்கு